நீட் தேர்வே ஒரு மோசடி; அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது மு.க.ஸ்டாலின் கட்டுரை - உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மட்டுமல்ல, அந்தத் தேர்வு முறையே ஒரு மோசடி என்பதை வெளிப்படுத்தும் வகையில், தி இந்து நாளிதழில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரை அமைந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவுகளை தகர்க்கும் நோக்கத்தில்தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் செயல்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அந்தத் தடைகளை முறியடித்து சமூகநீதியை நிலைநிறுத்தும் போராட்டத்தில் தி.மு.க.
எப்போதும் முன்னணியில் இருந்து செயல்படும் என்றும் தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.