சென்னை எண்ணூரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது...
சென்னை எண்ணூர் அருகே சாலையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பைக் சாகசங்கள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.