கூடலூரில் வீட்டு முன் சுற்றித்திரிந்த சிறுத்தை; சி.சி.டி.வி. காட்சியால் பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகிலுள்ள பாடந்துறை பகுதியில், நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக கூண்டு அமைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.