டெல்லியில் சோகம்: ஆட்டோ மீது மோதிய பள்ளி பேருந்து... 12 வயது மாணவி பலி
டெல்லியின் மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 12 வயது பள்ளி மாணவி உயிரிழந்தார்.பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவி பயணித்த ஆட்டோவை (இ-ரிக்ஷா) பின்னால் வந்த பள்ளி பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. மோதலின் தாக்கத்தில் மாணவி சாலையில் விழுந்த நிலையில், அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.