சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் பலி...
சீனாவின் தெற்கு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாயமாகியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவாங்சி மாகாணத்தின் பல பகுதிகளில் அணைகள் நிரம்பி வழிந்ததுடன், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்களை கடுமையாக பாதித்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் அவசர உதவிக்குழுக்கள், படகுகள் மற்றும் சிறப்பு மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சேதமடைந்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவைகளை விரைவாக சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கனமழை தொடரும் என வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.