Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானை; அரிசி மூட்டைகள் சேதம்

கேரளாவில் உணவு தேடி ரேஷன் கடைக்குள் புகுந்த காட்டு யானை; அரிசி மூட்டைகள் சேதம்
கேரளாவின் மலை மாவட்டமான இடுக்கியில் உள்ள ஆனையிரங்கல் கிராமத்தில், இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று ரேஷன் கடைக்குள் புகுந்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் யானையால் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வனத்துறையினரின் தகவலின்படி, சின்னக்கானல்–சாந்தன்பாறை பகுதிகளில் அடிக்கடி சுற்றித்திரியும் 'சக்ககொம்பன்' என்ற காட்டு யானையே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ரேஷன் கடைக்குள் நுழைந்த யானை, அரிசி மூட்டைகளை வெளியே இழுத்துச் சென்று உணவாக எடுத்துக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Advertisement
பின்னர் பொதுமக்கள் இணைந்து அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியதாக கூறப்படுகிறது.இந்த ரேஷன் கடை பல ஆண்டுகளாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து ஆளாகி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு **'அரிக்கொம்பன்'** என்ற ஆண் யானையும் அடிக்கடி இந்தக் கடையை சேதப்படுத்தி வந்தது. பின்னர் அந்த யானை 2023-ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு