இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுங்கள்’ - பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் ...
இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன், பட்டம் பெறும் மாணவர்கள் சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பட்டம் என்பது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனம் மற்றும் வரி செலுத்தும் மக்களின் கூட்டு முயற்சியின் பலன் என்றும் அவர் குறிப்பிட்டார். அதனால் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக திறமைகளை பயன்படுத்துவது ஒவ்வொரு பட்டதாரியின் பொறுப்பு என்றார்.
மேலும், தொடர்ந்து புதிய அறிவை கற்றுக்கொள்ளும் மனப்பான்மை, புதுமைகளை உருவாக்கும் திறன் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் எண்ணம் ஆகியவை இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் என வலியுறுத்தினார்.
இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி பயணித்து வருவதாகக் கூறிய அவர், அந்த இலக்கை எட்டுவதில் இன்றைய மாணவர்களின் அறிவும் திறமையும் முக்கிய பங்காற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.