‘கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் பா.ஜ.க. அரசு’ – மாணிக்கம் தாகூர் விமர்சனம்
காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தொழிலதிபர் சுபாஷ் சந்திராவின் புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்து, பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரூ.22,006 கோடி கடன் நிலுவையில் இருந்த நிலையில் வெறும் ரூ.6.5 கோடி செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 99.97 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பொதுத்துறை வங்கிகளும், மக்களின் சேமிப்புப் பணமும் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுபாஷ் சந்திரா தனது ‘The Z Factor’ சுயசரிதையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனான தனது தொடர்பு குறித்து குறிப்பிட்டுள்ள பகுதிகளையும் மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதில், தனது 10-வது வயதில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவரை சந்தித்ததாகவும், தனது தந்தை ஸ்வயம்சேவகராக இருந்ததாகவும் சுபாஷ் சந்திரா குறிப்பிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆதம்பூரில் தனது தந்தை நடத்தி வந்த ஆர்.எஸ்.எஸ். கிளையில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தொடர்ந்து பங்கேற்றதாகவும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல், வாஜ்பாய் ஆட்சிக் காலம் முதல் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் வரை தாம் மேற்கொண்டதாகக் கூறப்படும் தொடர்புகள் மற்றும் லாபியிங் நடவடிக்கைகள் குறித்தும் சுபாஷ் சந்திரா தனது சுயசரிதையில் எழுதியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ரஜ்ஜு பய்யாவை சந்தித்தது மற்றும் டெல்லியில் உள்ள ஜண்டேவாலன் அலுவலகத்தில் நடைபெற்ற நீண்ட ஆலோசனைக் கூட்டம் குறித்த பதிவுகளையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.மேலும், தங்களது நோக்கத்தில் நம்பிக்கையும் நேர்மையும் இருந்தால் எந்த தடையையும் கடக்க முடியும் என்ற கருத்தை சுபாஷ் சந்திரா தனது புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.இதனைச் சுட்டிக்காட்டிய அவர், பா.ஜ.க.