எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: 14 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர்.இந்த வழிபாட்டு தலத்தில் பிரார்த்தனை செய்வதற்காக ஏராளமானோர் சென்றிருந்தனர். சம்பவம் நடந்தபோது, மலைப்பகுதியில் உள்ள அந்த மத வழிபாட்டு தலத்தில் 21 பேர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து வழிபாட்டு தலத்தை மூடியதில் அங்கு இருந்தவர்கள் சிக்கினர்.இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.