Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்-அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்: ஜவாஹிருல்லா பேட்டி**

அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்-அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்: ஜவாஹிருல்லா பேட்டி**

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் இன்று பதிலுரை வழங்கினார். அப்போது, திமுக ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களையும் அவர் முன்வைத்துப் பேசினார்.இதற்கு திமுக தரப்பில் பதிலளிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுக உறுப்பினர்களுடன் இணைந்து மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டசபை வளாகத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:“ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதல்-அமைச்சர்களாக இருந்த காலங்களிலும் எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ளனர்.

Advertisement
ஆனால், அந்த விமர்சனங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்தன. இன்று முதல்-அமைச்சர் விஜய் அந்த வரம்பை மீறிப் பேசியுள்ளார்.காவல்துறை மானியக் கோரிக்கைக்கு அளிக்கப்படும் பதிலுரையில், உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விளக்கமளிப்பதே வழக்கமாகும். ஆனால், இன்று வழங்கப்பட்ட உரை அதுபோன்ற பதிலுரையாக அமையவில்லை. முதல்-அமைச்சர் விஜய் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு