உக்ரைன் மீது ரஷியாவின் தீவிர ஏவுகணை, டிரோன் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு
உக்ரைன்–ரஷியா இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், அவை வெற்றியளிக்காததால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது.இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 27 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.