அமர்நாத் யாத்திரை: 1.13 லட்சம் பேர் தரிசனம்...
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரையில் இதுவரை 1.13 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித குகைக் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். யாத்திரை தொடங்கிய முதல் ஐந்து நாட்களிலேயே இந்த எண்ணிக்கை எட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.யாத்திரை பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மருத்துவம், போக்குவரத்து, ஓய்வு மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்தால் மற்றும் பஹல்காம் வழித்தடங்கள் மூலம் புனித குகையை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
யாத்திரை ஏற்பாடுகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த நிர்வாகம், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சீரான வசதிகளை தொடர்ந்து உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தேதியில் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்றும் நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.