அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருமானத்தில் அதற்கேற்ப உயர்வு இல்லாததால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் குடும்பங்களின் பொருளாதார நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் கணிசமான பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே செலவாகும் சூழல் உருவாகியுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை தமிழக அரசு சாதாரண பிரச்சினையாக கருதாமல், மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியமான விஷயமாக அணுக வேண்டும் என்றும், விலைகளை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பொருளாதார நெருக்கடியின்றி நிம்மதியாகவும் கண்ணியமாகவும் வாழும் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.