‘மக்களை தூண்டிவிடவும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் முதல் ஆளாக வருபவர் ராகுல் காந்தி’ - கங்கனா ரனாவத் விமர்சனம்
‘மக்களை தூண்டுவதிலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதிலும் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்’ - கங்கனா ரனாவத் விமர்சனம்
மக்களை தவறாக வழிநடத்துவதற்கும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயல்களில் ஈடுபடுவதற்கும் ராகுல் காந்தி முதலில் இருப்பதாக பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில் இன்று நீட் தேர்வு முறைகேடு, மாணவர் போராட்டங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கங்கனா ரனாவத், பிரதமர் மோடி தொடர்பான வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.அப்போது அவர், “நடைபெற்ற தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.
பயங்கரவாத சக்திகளால் நாட்டின் பாதுகாப்புக்கு உருவாகும் அச்சுறுத்தல்களுக்கு எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.இதற்கிடையில், ஜார்க்கண்ட் மாநில அரசு பணித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கங்கனா ரனாவத், “நமது இளைஞர்களும், குழந்தைகளும் பல ஆண்டுகளாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் மோசமான சூழலை உருவாக்கினர். நாடாளுமன்றத்தை தாக்கும் முயற்சியும் நடைபெற்றது.ஆனால் ஜார்க்கண்டில் மாணவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், அவர்களை சந்திக்க ராகுல் காந்தி அங்கு செல்லவில்லை. அதே நேரத்தில், மக்களை தூண்டுவதற்கோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான சூழலை உருவாக்குவதற்கோ ராகுல் காந்தியே முதலில் முன்வருகிறார்” என்று தெரிவித்தார்.