Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

திருப்பரங்குன்றத்தில் 80வது சுதந்திர தினம்

திருப்பரங்குன்றத்தில் 80வது சுதந்திர தினம்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா சார்பில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளையும், நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். விழாவில் மாநில மகளிர் அணி செயலாளரும், தென்மண்டல அமைப்பாளரும், வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திருமதி அன்னலட்சுமி சகிலா கணேசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், அகில பாரத அனுமன் சேனா மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் ஜி, மாவட்ட தலைவர் சக்திவேல் ஜி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசப்பற்று மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
Advertisement
விழாவில் பங்கேற்ற அனைவரும் நாட்டின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து பாடுபட உறுதி ஏற்றனர். திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற இச்சுதந்திர தின விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு