அஜித்குமார் கொலை வழக்கு: மதுரை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் – ஜூலை 29 முதல் விசாரணை
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான சிபிஐ விசாரணை வழக்கு, மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை, வரும் ஜூலை 29 முதல் புதிய நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. இதற்கு முன்பு வழக்கு மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் அதிகளவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், விசாரணையை விரைந்து முடிக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கின் விசாரணை வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.