Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. மாநிலத்திற்கு அதிகளவில் மழைப்பொழிவை வழங்கும் இந்த பருவத்தில், புயல் உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement
அந்த வகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் அதிகாரிகளுடன் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு