நீட் தேர்ச்சி விகிதம் சரிவு: தமிழ்நாட்டிலும் பாதிப்பு
நாடு முழுவதும் நீட் (NEET) மறுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் அதே நிலை பதிவாகியுள்ளது.இந்த ஆண்டு சுமார்20லட்சம்மாணவர்கள் நீட் மறுதேர்வில் பங்கேற்றதாகவும், அதில் சுமார் 11.21 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும் தேசியதேர்வுமுகமைதெரிவித்துள்ளது.முந்தையஆண்டுகளுடன்ஒப்பிடும்போதுதேர்ச்சிஎண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.தமிழ்நாட்டில் 1,08,601 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 61,306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், தேர்வு எழுதியோர் எண்ணிக்கையும், தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கையும் சரிவைக் காட்டுகிறது.கல்வியாளர்கள் கூறுவதன்படி, இந்த ஆண்டு வினாத்தாள் அதிக சிரமம் கொண்டதாக இருந்தது. மேலும், தேர்வு தொடர்பான நிச்சயமற்ற சூழல், தொடர் குழப்பங்கள் மற்றும் குறுகிய காலத் தயாரிப்பு வாய்ப்பு ஆகியவை மாணவர்களின் செயல்திறனை பாதித்திருக்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.