தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பெயர்களை மட்டும் மாற்றி, அவற்றை த.வெ.க. அரசு புதிய திட்டங்களாக அறிவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிலவி வருவதாகவும், தற்போதைய ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.க. எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாததால், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் மக்களுடன் தொடர்ந்து நிற்கும் இயக்கமாக தி.மு.க. இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். த.வெ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வதுடன், அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையும் அதிகரித்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
Advertisement
பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த போதிலும், அவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி, அவற்றை த.வெ.க. அரசு செயல்படுத்தியதாகக் காட்ட முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி, அவை தங்களால் கொண்டு வரப்பட்டவை போன்ற தோற்றத்தை உருவாக்கி வருவதாகவும் விமர்சித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், தி.மு.க. சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். த.வெ.க. ஆட்சியின் வீழ்ச்சிக்கு இரு தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. பெறும் வெற்றி தொடக்கமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.