Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

குற்றால சீசன் முடிவுக்கு வந்தது.. தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

குற்றால சீசன் முடிவுக்கு வந்தது.. தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் களைகட்டும். இந்த காலகட்டத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள். தொடர்ந்து மழை பெய்தால் சீசன் மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதும் வழக்கம். இந்த ஆண்டு எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாகவே பெய்தது.

Advertisement
இதன் தாக்கமாக குற்றாலத்தின் பல்வேறு அருவிகளில் பல நாட்களாக குறைந்த அளவிலேயே தண்ணீர் வரத்து காணப்பட்டது.இந்நிலையில், தற்போது அருவிகளில் நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் குற்றால சீசனும் முடிவுக்கு வந்துள்ளது. அருவிகளில் குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு