குடும்பத் தகராறில் மனைவி உயிரிழப்பு: கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடையராஜபாளையம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உடையராஜபாளையத்தைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோருக்கு கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்ததாக கூறப்படும் பாபு, ஸ்ரீதேவியை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதையடுத்து, சம்பவத்திற்குப் பிறகு பாபு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஆம்பூர் கிராமிய போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.