கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்வு
ஈரான்-அமெரிக்க போரால் பெட்ரோல், டீசல் விலை நேற்று கணிசமாக உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 1.69 ர ரூபாய் உயர்ந்து, லிட்டர் ரூ.109.46-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 1.71 ரூபாய் உயர்ந்து ரூ.101.26-க்கும் விற்பனையானது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த அச்சம் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிலவரம் குறித்து நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
மேலும், போக்குவரத்து செலவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் பல்வேறு பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.உலக சந்தையின் நிலைமையைப் பொறுத்து கச்சா எண்ணெய் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், வர்த்தக நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.