என் மனதின் ஆறாத காயம் கரூர் சம்பவம்: முதல்-அமைச்சர் விஜய்...
கரூரில் நடைபெற்ற அரசு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் விஜய், கடந்த ஆண்டு கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத துயரமாக இருப்பதாகக் கூறினார்.
பேச்சின் போது, உயர்ந்த பதவிக்கு சென்றாலும் சில நிகழ்வுகள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் என்றும், கரூர் சம்பவம் அத்தகைய மறக்க முடியாத வேதனையாகவே தன்னுள் நிலைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அந்த விபத்தில் உயிரிழந்தவர்களை நினைக்கும் போதெல்லாம் மிகுந்த மனவேதனை ஏற்படுவதாக கூறிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகால ஆதரவாக அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.