அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் சம்பவங்களை பொதுமக்கள் எளிதாக புகாரளிக்கும் வகையில், வாட்ஸ்அப் புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், லஞ்சம் கோரப்பட்டதாக கருதும் பொதுமக்கள் சம்பவம் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஆவணங்களை நேரடியாக வாட்ஸ்அப் மூலம் அனுப்பி புகார் தெரிவிக்கலாம்.
பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, ஆரம்பக் கட்ட விசாரணைக்குப் பிறகு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்தாரர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.அரசு சேவைகள் வெளிப்படைத்தன்மையுடனும், லஞ்சமற்ற நிர்வாகத்தையும் உறுதி செய்வதே இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கோரப்பட்டால் தயக்கமின்றி வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.