751 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய முதல்-அமைச்சர்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வான மருத்துவர்களிடம் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர், அரசின் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இந்த புதிய நியமனங்கள் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகள் மேலும் விரைவாகக் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பணி நியமன ஆணைகளை பெற்ற மருத்துவர்கள் அரசுப் பணியில் இணைவதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க உறுதியளித்தனர்.