வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதி: கேரள போக்குவரத்துத் துறையின் புதிய சேவை நாளை அறிமுகம்
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), பயணிகள் டிக்கெட் முன்பதிவை மேலும் எளிதாக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இணைந்த புதிய வாட்ஸ்அப் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த வசதியின் மூலம், பயணிகள் வாட்ஸ்அப் செயலி வழியாகவே விரைவாகவும் சிரமமின்றியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.பொதுப் போக்குவரத்து சேவைகளை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கைகளை கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்அப்பை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்த புதிய சேவை அறிமுகமாகிறது.
இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய அம்சமாகும்.இந்த புதிய திட்டத்தை கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜான், ஆகஸ்ட் 6-ஆம் தேதி (நாளை) அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். அதே நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர கட்டணமில்லா வாடிக்கையாளர் உதவி மையம் (149) மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூரியர் சேவையையும் அவர் அறிமுகப்படுத்த உள்ளார்.