சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-178, தரமணி, அண்ணா தெருவில் 178-வது வார்டு மாமன்ற உறுப்பினரின் .சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் ஆர். பிரியா கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு மையம், அப்பகுதி மக்களின் சமூக மற்றும் பொது பயன்பாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதில் பொதுக்கூட்டங்கள், சமூக நிகழ்ச்சிகள், மக்களுக்கான சேவை முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.திறப்பு விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கட்டடம் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகள் மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கான மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.