தமிழக முதல்-அமைச்சர் விஜய், இந்தியாவிற்கான கஜகஸ்தான் தூதரை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பின் போது, இந்தியா–கஜகஸ்தான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்துவது மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இருதரப்பினரும் விவாதித்தனர்.
Advertisement
இந்த சந்திப்பு, தமிழ்நாட்டின் உலகளாவிய முதலீட்டு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.