Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரியின் 16-ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது.புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த மே 13-ஆம் தேதி ரங்கசாமி முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதையடுத்து 2 கட்டங்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவக்கொழுந்து, ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அன்பழகன் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த 5-ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவது தொடர்பாக கடந்த ஜூன் 24-ஆம் தேதி புதுவை சட்டசபையில் இருந்து கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அதில் ஜூலை 2-ஆம் தேதி சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
Advertisement
இந்த கோப்பு தற்போதுகவர்னரின்பரிசீலனையில்உள்ளது.இதுவரைஅனுமதிவழங்கப்படவில்லை.இதனிடையே, புதுச்சேரியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவையில் அமலில் உள்ள இடைக்கால பட்ஜெட்டின் கால அவகாசம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சட்டசபையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதற்கான நடவடிக்கையாக, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் 16-ஆவது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடக்க நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.சட்டமன்றத்திற்கு வருகை தந்த துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு