ஓணம் ஸ்பெஷல்: மங்களூரு - கொல்லம் இடையே நாளை சிறப்பு ரெயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மங்களூரு ஜங்ஷன் - கொல்லம் இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மங்களூரு ஜங்ஷனில் இருந்து நாளை காலை 8 மணிக்கு 06052 என்ற எண் கொண்ட சிறப்பு ரெயில் புறப்பட்டு, மாலை 6.45 மணிக்கு கொல்லத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், கொல்லத்தில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு 06051 என்ற எண் கொண்ட சிறப்பு ரெயில் புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூரு ஜங்ஷனை வந்தடையும்.20 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (24-ந் தேதி) நண்பகல் 12 மணிக்கு தொடங்கியுள்ளது.