திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட கடல் உணவுத் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ‘சீல்’
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் இயங்கி வந்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தொழிற்சாலை செயல்பாடுகள் குறித்து பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தொழிற்சாலையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி, வளாகத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.மேலும், பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
ஆய்வு அறிக்கை மற்றும் விதிமுறை பின்பற்றல் தொடர்பான மதிப்பீட்டின் பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடரப்பட்டு வருகின்றன.