திருப்பூர் அருகே கோர விபத்து: டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஊட்டி நோக்கி சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்த கார், திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே விபத்துக்குள்ளானது.
சாலையில் பழுதாகி நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரியின் பின்புறம் கார் மோதியதில், 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், காயமடைந்த 5 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.