தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையை கையில் எடுத்த அமலாக்கத்துறை
தவெக (தமிழக வெற்றி கழகம்) எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை (ED) ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை அல்லது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ள நிலையில், வழக்கின் உண்மை நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை எந்தத் தரப்பினரின் மீதும் இறுதியான முடிவு எட்டப்படவில்லை.