Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
செவ்வாய் | 08 செப்டம்பர் 2026 | 23 ஆவணி பராபவ வருடம்

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்: பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் 14,581 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் கள ஆய்வு நடத்தி, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 3 ஆய்வுகள் நடத்தப்படும்.

Advertisement
ரூ.43 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த ஆய்வுகளில், டெங்கு கொசுவின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், டெங்கு பரவலைத் தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். வீடுகளைத் தூய்மையாக வைத்திருப்பதுடன், சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு