ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு: தவெக அரசை கண்டித்து செப். 3-ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
மதுரை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக அரசைக் கண்டித்து மதுரையில் செப்டம்பர் 3-ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவைத் தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததாக தவெக அரசை விமர்சித்துள்ளார். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக பல்வேறு நிகழ்வுகளை அந்த அரசு அரங்கேற்றிவருவதாகவும்அவர்குற்றம்சாட்டியுள்ளார்.சட்டப்பேரவையில் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா, தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், நாகரிகம் மற்றும் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என அவமதிக்கும் வகையில் பேசியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக அதிமுக மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த வழக்கில், 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என்பதால் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியதுடன், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகதமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அப்போதைய அதிமுக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 2017 ஜனவரி 21-ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை கொண்டு வந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.பின்னர், தமது தலைமையிலான அப்போதைய அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து நிரந்தர சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியதாக அவர்தெரிவித்துள்ளார்.இதன்மூலம்ஜல்லிக்கட்டுவெறும்பொழுதுபோக்குநிகழ்ச்சிஅல்ல;அதுதமிழர்களின்கலாசாரபாரம்பரியத்தின்ஒருபகுதியாகசட்டரீதியாகஉறுதிசெய்யப்பட்டதாகவும்குறிப்பிட்டுள்ளார்.இந்தசட்டத்திருத்தத்தைஎதிர்த்துவிலங்குநலஅமைப்புகள்உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்த நிலையில், 2023 மே 18-ஆம் தேதி அரசியல் சாசன அமர்வு தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்ததாகவும், இதன் மூலம் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்துவதற்கான சட்டப்பூர்வ நிலை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.