தலை துண்டித்து பெயிண்டர் கொலை: நெல்லையில் பதற்றம்; அதிரடிப்படையினர் குவிப்பு
நெல்லை உடையார்பெட்டி அருகே மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பெயிண்டர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இன்று வழக்கம்போல் வீட்டில் இருந்து குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பதுங்கியிருந்தஇருவர்,பாஸ்கரைவழிமறித்துதாக்கியுள்ளனர்.திடீரென ஆயுதங்களால் தாக்கிய அந்த இருவரும் பாஸ்கரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது தலையை அவரது வீட்டின் முன்பு வீசிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.ஆற்றங்கரைக்கு சென்ற பொதுமக்கள், பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தச்சநல்லூர் போலீசார், பாஸ்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில், பாஸ்கரை கொலை செய்ததாக கூறப்படும் இருவரும் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று போலீசாரிடம் சரணடைந்துள்ளனர்.