ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. க்யூஷூ தீவில் உள்ள குமாமடோ நகரை மையமாகக் கொண்டு, சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த அதிர்வால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பிற்காக திறந்தவெளி மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.