சென்னை: தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தபால்துறை சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் கருத்துகள் மற்றும் குறைகளைப் பெறும் வகையில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 11,745 தபால் நிலையங்களில் சேவைகளைப் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாமை முன்னிட்டு, தபால்துறை சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேலும் மேம்படுத்துவது தொடர்பான தங்களது கருத்துகளை வாடிக்கையாளர்கள் அனுப்பலாம்.
Advertisement
இதற்காக, “தபால்துறை குறைதீர்ப்பு முகாம்” என்ற தலைப்பில், சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை தபால்துறை தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002 என்ற முகவரிக்கு 18.09.2026 அல்லது அதற்கு முன்பாக கருத்துகளை அனுப்ப வேண்டும். மேலும், “தக் அதாலத்” என்ற தலைப்பில் [pg.tn@indiapost.gov.in](mailto:pg.tn@indiapost.gov.in) என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துகளை அனுப்பலாம்.