சென்னையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில், ஹுண்டாய் நிறுவனம் தனது நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் 18 அரசு பள்ளிகளுக்கு புதிய பெஞ்ச்-டெஸ்குகளை வழங்கியுள்ளது.இந்த முயற்சியின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தரமான இருக்கை வசதியைப் பெற்று, சிரமமின்றி வகுப்பறைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை உருவாக்குவதுடன், அரசு பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கல்வித் துறையினர் மற்றும் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களின் தேவையை உணர்ந்து உதவிக்கரம் நீட்டிய ஹுண்டாய் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அரசு–தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பால் கல்வி வசதிகளை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.