ஆந்திராவில் மாணவர் சேர்க்கை குறைவு; ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
ஆந்திராவில் தனியார் பள்ளிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்திருப்பதாக ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பான (UDISE Plus) தரவுகள் காட்டுவதாக முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், 2025-26 கல்வியாண்டுக்கான UDISE Plus தரவுகள் மாநில அரசின் கூற்றுக்கு முரணாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் இருந்து 1.1 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு மாறியதாக அரசு கூறுவது உண்மைக்கு மாறானது என ஜெகன் மோகன் ரெட்டி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.