அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதி: அமைச்சர் நிர்மல்குமார் அடிக்கல் நாட்டினார்...
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், புதிய மாணவர் விடுதி கட்டுமான பணிக்கு அமைச்சர் நிர்மல்குமார் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய விடுதி சுமார் 240 மாணவர்கள் தங்கும் வசதியுடன உள்ளது. இதற்கான கட்டுமான செலவு ரூ.24.71 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தங்கும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய விடுதி மூலம் மாணவர்களின் விடுதி வசதி குறைபாடுகள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.