நெல்லையில் 2.25 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
திருநெல்வேலி மாநகரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பெருமாள்புரம் மற்றும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து பெருமாள்புரத்தைச் சேர்ந்த சுகுமார் (23), மேலப்பாளையத்தைச் சேர்ந்த திவான்மைதீன் (22) ஆகிய இருவரிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.அவர்களிடமிருந்து மொத்தம் 2 கிலோ 250 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.