Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் விஜய், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.அதன்படி, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.289-ம், பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.150-ம் கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600-ம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.இதேபோல், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.3,290.50 உடன், தமிழக அரசு சார்பில் டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
Advertisement
இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 கிடைக்கும்.நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.150 வரை உயர்த்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.134-க்கு மேல் வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை என்றும் முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.விவசாயிகளை அரசு ஒருபோதும் கைவிடாது என்றும், அவர்களுக்கு தொடர்ந்து துணை நிற்கும் வகையில் அரசு செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு