தீரன் சின்னமலை நினைவு நாள்: அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.
குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தீரன் சின்னமலைக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.