தாய்லாந்து பாரில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட தகவலின்படி, மின்கசிவு அல்லது குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவியிருக்கலாம் என்றும், அவசர வெளியேறும் வழிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.