டிஎன்பிஎல்: திருச்சிக்கு எதிராக நெல்லை பந்துவீச்சு தேர்வு
10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதற்கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், இன்று நடைபெறும் 12-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற டாஸில் நெல்லை அணியின் கேப்டன் சோனு யாதவ் வெற்றி பெற்றார்.
இதையடுத்து முதலில் பந்துவீச அவர் முடிவு செய்தார். இதனால் திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.