ஆன்லைனில் மஆன்லைன் மதுபான விற்பனை இல்லை; முன்பதிவு வசதி மட்டுமே - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்துபானம் விற்பனை என்பது தவறானது: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் மது விலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுவது தவறான தகவல் என அவர் தெரிவித்தார்.
ஆன்லைனில் மதுபானத்தை நேரடியாக வாங்க முடியாது என்றும், முன்பதிவு செய்யும் வசதி மட்டுமே தற்போது சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மதுபானத்தை பெறுவதற்கு கடைகளுக்குச் சென்றுதான் வாங்க வேண்டும் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.அனைத்து நிறுவனங்களின் மதுபானங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறிய அமைச்சர், மதுபான விற்பனை மூலம் அரசின் வருவாயை அதிகரிப்பது தங்களது நோக்கம் அல்ல என்றார்.மேலும், மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது என்றும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக வருவாய் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுக்கூடங்களில் நிலவும் குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் நடைமுறை 2011-ம் ஆண்டு முதல் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.