Skip to main content
🌤️ —°C
வியாழன் | 30 ஜூலை 2026 | 14 ஆடி பராபவ வருடம்

வினாத்தாள் கசிவுக்கு கடும் கட்டுப்பாடு: மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி

வினாத்தாள் கசிவுக்கு கடும் கட்டுப்பாடு: மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது: “வினாத்தாள் கசிவு என்பது ஒரு சாதாரண தவறு அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் நேரடியாக பாதித்துள்ள மிகக் கவலைக்கிடமான பிரச்சினையாகும். கடந்த இரண்டரை மாதங்களில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒரு கல்வியாண்டை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கான தேர்வுகளை விரைவாக நடத்த அரசு முழுமையாக செயல்பட்டது. மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, அதற்கான ஒப்புதல் நேற்று நள்ளிரவில் வழங்கப்பட்டது.இந்த விவகாரம் குறித்து இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடைபெறும். அமைச்சர்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். நாடாளுமன்றத்தின் இரண்டாவது வார கூட்டத்தொடர் தொடங்கும் திங்கள்கிழமை, அதற்கான மசோதாவை விரைவில் நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் முக்கிய கோரிக்கை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் என மீண்டும் வலியுறுத்தினார்.இதற்கிடையில், மத்திய அரசு கல்வித்துறையில் முக்கிய நிர்வாக மாற்றங்களையும் அறிவித்துள்ளது.
Advertisement
உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த வினீத் ஜோஷி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய உயர்கல்வித்துறை செயலாளராக நரேஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக டி.கே. அனில் குமார் பொறுப்பேற்றுள்ளார்.டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனுடன், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) சட்டம், 2024-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக டெல்லியில் தனி விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் புதிய நீதிமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளன.அந்தச் சட்டத்தின் படி, தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், புதிய விரைவு நீதிமன்றத்தின் சிறப்பு சி.பி.ஐ. நீதிபதியாக அனு குரோவர் பாலிகா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு