நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டசபையில் தனித்தீர்மானம்
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.இன்றைய சட்டசபை நிகழ்வுகளில் மொத்தம் 2 அரசினர் தனித் தீர்மானங்கள் முன்மொழியப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமாகும். மற்றொன்று எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்தத்துக்கு எதிரான தீர்மானமாகும்.
இந்த இரு தீர்மானங்களையும் அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் இன்று சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.