தென்காசி செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரெயில் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
திருவனந்தபுரம் சென்டிரல் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து தாம்பரத்திற்கு ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06110), செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 28-ந் தேதி வரை மேலும் 6 சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06109), செப்டம்பர் 24-ந் தேதி முதல் அக்டோபர் 29-ந் தேதி வரை கூடுதலாக 6 சேவைகள் இயக்கப்பட உள்ளன.